Kokkarakko Seval Onnu (Velan Serial Title) Song Lyrics in Tamil (கொக்கரக்கோ சேவல் ஒன்னு) | Murugan Bakthi Padalgal

Kokkarakko Seval Onnu (Velan Serial Title) Song Lyrics

Name Lord Murugan Song
Song Kokkarakko Seval Onnu (கொக்கரக்கோ சேவல் ஒன்னு)
Singer Pushpavanam Kuppusamy
Music —–
Lyrics —–
Date —–
Lyrics in தமிழ்Lyrics in English

Kokkarakko Seval (Velan Serial Title) Song Lyrics in Tamil

ஓம் என்னும் மாத்திரத்தில்

ஆளும் வேலன்

ஓதும் உள்ளத்தில் நின்று

ஆடும் வேலன்

 

வேலன் வேலன்

ஓம் வேலன் வேலன்

வேலன் வேலன்

ஓம் வேலன் வேலன்

 

கந்தனுக்கு அரோகரா

கடம்பனுக்கு அரோகரா

முருகனுக்கு அரோகரா

வேல் வேல் வேல் வேல்

 

கொக்கரக்கோ சேவல் ஒன்னு

என்ன சொல்லி கூவுது

வேல் வேல் வேல் வேல்

வேல்முருகா வேல் வேல்

 

கொக்கரிச்சு நிக்கும்போது

என்ன பேரு கூறுது

வேல் வேல் வேல் வேல்

வேல்முருகா வேல் வேல்

 

மனமே படைவீடு நீ தேடிவா

என செய்தி அது கூறி

சுத்தி வருகுது சுத்தி வருகுது

முத்துவேலை சுத்தி சுத்தி

முக்தி அடையுது

 

தத்தி வருகுது தத்தி வருகுது

தங்கவேலை சுத்தி சுத்தி

தஞ்சம் அடையுது

 

திருநீறு பூசிக்கொள்ளும்

தெய்வானை மன்னாவை

திருப்பரங்குன்றத்திலே

காண்போம் ஐயா

 

கந்தனுக்கு வேல் வேல்

கடம்பனுக்கு வேல் வேல்

முருகனுக்கு வேல் வேல்

குமரனுக்கு வேல் வேல்

 

அலைபாயும் கடலோரம்

சம்கார வடிவேலை

செந்தூரில் நாம் காண

செல்வோம் ஐயா

 

பழனி மலையில்

பழமாகி நின்றான்

அழகன் முருகன்

அறிவோம் ஐயா

 

சுவாமி மலை தணிகை மலை

பழமுதிரும் சோலை மலை

உலவுகின்ற மயில் அழகை

காண்போம் ஐயா

 

கந்த சஷ்டி என்னும்

காக்கும் கவசம் அதை

கூறும்போது சுகமே

கூறும்போது சுகமே

 

சஷ்டி சண்முகனை

போற்றும் திருப்புகழை

ஆடிபாடும் மனமே

ஆடிபாடும் மனமே

 

வந்த கஷ்டங்களை

தீர்க்கும் தெய்வம் அதை

தேடும்போது நலமே

தேடும்போது நலமே

 

வெற்றி வடிவேலை

பற்றி பிடித்தோரை

கூடும் கோடி ஜெயமே

 

சுத்தி வருகுது சுத்தி வருகுது

முத்துவேலை சுத்தி சுத்தி

முக்தி அடையுது

 

தத்தி வருகுது தத்தி வருகுது

தங்கவேலை சுத்தி சுத்தி

தஞ்சம் அடையுது

 

குறவஞ்சி கொடியோடு

கதை பேசும் வடிவேலை

குன்றக்குடி ஏறி

பணிவோம் ஐயா

 

அப்பனுக்கு வேல் வேல்

குப்பனுக்கு வேல் வேல்

ஐயனுக்கு வேல் வேல்

அழகனுக்கு வேல் வேல்

 

திருவாணி நதியோடு

கைவீசும் கதிர்வேலை

மருதமலை மேலே

பார்ப்போம் ஐயா

 

பள்ளி மலையில்

பல வேலன் நின்றான்

கள்ளத்தனம் ஏன்

நீ கேள்ளய்யா

 

சுருளி மலை சென்னி மலை

வரம் அருளும் விராலிமலை

முருகனுக்கு காவடிகள்

சேர்ப்போம் ஐயா

 

தங்க தாமரையில்

பூக்கும் புன்னகையை

காண கோடி தவமே

காண கோடி தவமே

 

சின்ன பாதம் அதில்

ஆடும் மணிச்சலங்கை

வேதமாகி வருமே

வேதமாகி வருமே

 

கந்த மாமயிலும்

காட்டும் கழிநடனம்

காண கூடு தினமே

காண கூடு தினமே

 

கந்த மாமருகன்

வாழும் தளம் அடைந்து

நாடி கேளு வரமே

 

கொக்கரக்கோ சேவல் ஒன்னு

என்ன சொல்லி கூவுது

வேல் வேல் வேல் வேல்

வேல்முருகா வேல் வேல்

 

கொக்கரிச்சு நிக்கும்போது

என்ன பேரு கூறுது

வேல் வேல் வேல் வேல்

வேல்முருகா வேல் வேல்

 

மனமே படைவீடு நீ தேடிவா

என செய்தி அது கூறி

 

சுத்தி வருகுது சுத்தி வருகுது

முத்துவேலை சுத்தி சுத்தி

முக்தி அடையுது

 

தத்தி வருகுது தத்தி வருகுது

தங்கவேலை சுத்தி சுத்தி

தஞ்சம் அடையுது

 

கந்தனுக்கு அரோகரா

கடம்பனுக்கு அரோகரா

முருகனுக்கு அரோகரா

வேல் வேல் வேல் வேல்

 

குமரனுக்கு அரோகரா

வேந்தனுக்கு அரோகரா

வேலனுக்கு அரோகரா

வேல் வேல் வேல் வேல்

வேல்….

Kokkarakko Seval Onnu (Velan Serial Title) Song Lyrics in English

 

Leave a Comment